×

மதுரையில் தீபாவளி புதுமைக் கொண்டாட்டம்

மதுரை, அக். 27: மதுரையில் அரசு ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளை அழைத்துச் சென்று, பிரபல ஸ்டார் ஒட்டலில் ‘பபே’ முறையில் விருந்து கொடுத்து புதுமையான முறையில் தீபாவளி கொண்டாடப்பட்டது. மதுரை மக்கள் தொடர்பு அலுவலர்கள் கூட்டமைப்பின் சார்பில் தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு அரசு அன்னை சத்யா ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் 30 பேர் மற்றும் இங்குள்ள ஊழியர்கள், பிரபல ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தீபாவளியை கொண்டாடும் வகையில் இவர்களுக்கு இங்கு ‘பபே’ முறையில் சிறப்பு விருந்து தரப்பட்டது.

மேலும் இனிப்புகள், பட்டாசுகள், ஆடைகள் வழங்கப்பட்டன. மக்கள் தொடர்பு அலுவலர்கள் கூட்டமைப்பு தலைவர் முரளி தலைமை வகித்தார், செயலாளர் ராமநாதன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறை மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தீர்ப்பாயத்தின் உறுப்பினர் சண்முகம் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சிவஞானம், முருகேசன், ராஜகோபால் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். நிறைவாக நிர்வாகி  சரவணநாதன் நன்றி கூறினார்.

Tags : Diwali New Year Celebration ,Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை