×

தீபாவளியையொட்டி உச்சக்கட்ட வியாபாரம் கடை வீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்

கிருஷ்ணகிரி, அக்.27:  தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி புத்தாடைகைள் அணிந்து, கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று, அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். இன்று நடைபெறும் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், சூளகிரி, வேப்பனஹள்ளி, ராயக்கோட்டை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் புது துணி வாங்கவும், பலகாரம் செய்ய தேவையான பொருட்கள் வாங்கவும், நோன்பு கயிறு, பூஜை சாமான்கள் வாங்கவும் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் பூக்கள், மண்பானைகள், பழங்கள் போன்றவற்றை வாங்க அதிக அளவில் கூட்டம் அலைமோதியது. அத்துடன் நகரில் வைக்கப்பட்டுள்ள தற்காலிக பட்டாசு கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்டத்தில் அசம்பாவிதம், திருடு போன்றவை நடைபெறாமல் தடுக்க போலீசார் ஆங்காங்கே தற்காலிக டவர் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் பட்டாசு கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

Tags : shop ,street ,Diwali ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி