×

பணி நிரந்தரம் கேட்டு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், அக்.25:  ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்திட வேண்டும். போனஸ் மற்றும் கருணைத் தொகையினை  உயர்த்தி வழங்கிட வேண்டும். ஊதிய உயர்வு பற்றி பேச்சுவார்த்தையை உடன்  துவக்கிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன்  திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி  சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். வேலைப்பளு ஒப்பந்தப்படி புதிய  பதவிகளை அனுமதித்திட வேண்டும். மின்சார வாரியங்களை தனியார் மயமாக்குவதை  கைவிட வேண்டும் என வலியுறுத்தி, மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பில் நேற்று விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத்தலைவர் ஆதிமூலம் தலைமை வகித்தார். வட்டச்செயலாளர் ஆவுடையப்பன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மின்வாரிய தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Power employees ,
× RELATED மின்வாரியத்தை கண்டித்து மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்