×

தேன்கனிக்கோட்டை அருகே காப்பு காட்டில் மரங்கள் வெட்டிய விவசாயி கைது

தேன்கனிக்கோட்டை, அக்.25: தேன்கனிக்கோட்டை அருகே, காப்பு காட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அரிய வகை மரத்தை வெட்டிய விவசாயி கைது செய்யப்பட்டார்.தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார், வனவர் கதிரவன் மற்றும் வன காவலர்கள் கொண்ட குழுவினர், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் குல்லட்டி காப்புகாட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எத்துக்குட்டை சரக பகுதியில் இருந்து மரம் வெட்டும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது ஒருவர், ஈட்டி மரத்தையும், ஒரு தேக்கு மரத்தையும் வெட்டி துண்டு துண்டாக்கி செதுக்கிக் கொண்டிருந்ததை கண்டனர். உடனே, அந்த நபரை சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர், தொட்டமஞ்சி ஊராட்சி துருகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்தப்பா(46) என்பது தெரியவந்தது. தீவிர விசாரணையில், மரம் வெட்டியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி உத்தரவின்பேரில், காப்பு காட்டில் அத்துமீறி நுழைந்து அரிய வகை மரங்களை வெட்டிய குற்றத்திற்காக, வனத்துறையினர் முத்தப்பாவை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags : Thenkanikottai ,salvage forest ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது