×

காலியிடங்களை நிரப்ப கோரி மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, அக்.25: தர்மபுரி மாவட்ட சிஐடியூ., தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், மின்வாரியத்தில் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். வேலூர் மண்டல செயலாளர் கோவிந்தராஜ், மாநில செயலாளர் ஜோதிமணி, மாநில துணை தலைவர் ஜிவா, பொருளாளர் ஜெயக்குமார், மாவட்ட துணைத்தலைவர் விஜியன், தர்மபுரி கோட்ட செயலாளர் சக்திவேல், கோட்ட தலைவர் சீனிவாசன், இணைசெயலாளர் கோபி ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். மின்வாரியம், 2,900 ஐடிஐ படித்தவர்களை கள உதவியாளர்களாக நேரடி நியமனம்  மூலம் எடுப்பதாக கூறி ஓராண்டுக்கும் மேலாகியும் நியமனம் செய்யவில்லை. எனவே,  உடனடியாக தமிழக அரசும் மின்வாரியமும் நியமன நடவடிக்கை எடுக்கவேண்டும்.  ஐடிஐ படித்து மின்வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சி முடித்தவர்களை நேரடி  நியமனம் மூலம் தேர்வு செய்ய வேண்டும். மின்வாரியத்தில் ஐடிஐ படித்தவர்களை  பணிக்கு எடுக்கும் போது வயது வரம்பை தளரத்தி நியமனம் செய்யவேண்டும் என  வலியுறுத்தினர். இதில், சிஐடியூ மாவட்ட தலைவர் ஜி.நாகராஜன், மாவட்ட செயலாளர் சி.நாகராசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அரூர் கோட்ட துணைத்தலைவர் குமரவேல் நன்றி கூறினார்.

Tags : Electricians ,
× RELATED கார் டயர் வெடித்து விபத்து திருச்சியை...