×

போலீசாருக்கு நிலவேம்பு கசாயம்

வத்தலக்குண்டு, அக்.24: வத்தலக்குண்டு காவல்நிலையத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும்நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வத்தலக்குண்டு அரசு மருத்துவமனை மற்றும் காவல்துறை சார்பாக வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் தலைமை வகித்தார். டாக்டர்வசந்த்மில்டன்ராஜன், சப்இன்ஸ்பெக்டர் கலையரசன், வதிலை பசுமை இயக்கம் சேர்மன் மருதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்புநிலை மருந்தாளுநர் முகமதுஅலி, அரசு மருத்துவமனை பணியாளர்கள் தயாநிதி, ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Tags : Quake ,
× RELATED ஜப்பானில் நிலநடுக்க பலி 73ஆக அதிகரிப்பு