திண்டுக்கல், அக்.24: மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள் நிறைவு விழா கருத்தரங்கம் திண்டுக்கல் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனி ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரசூல் மைதீன், முகமது சித்திக், சிவாஜி, ரேணுகோபால், மாநகர மாவட்ட துணை தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜாஜி, அரபு முகமது ஆகியோர் வரவேற்றனர். கிருஷ்ணகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னாள் எம்எல்ஏ தண்டபாணி, காந்தி மன்ற மாநில
தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டம் நிறைவாக மண்டல தலைவர் தனபால் நன்றி கூறினார். இதையடுத்து காந்திஜியை நினைவு கூரும் வகையில் அவரது புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அதனை அனைவரும் பார்வையிட்டனர். இக்கருத்தரங்கில் மாவட்ட, மண்டல, நகர, வட்டார, வார்டு, கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.