×

குற்ற வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்கள் கைது

திருப்பூர், அக். 24:   திருப்பூரில் பல்வேறு குற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில்  ஆஜராகாமல் இருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.   திருப்பூரில் பல்வேறு குற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவர்களுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவுப்படி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் கடந்த 2014ம் ஆண்டு திருப்பூர் அவிநாசி ரோடு சைக்கிள் மார்ட் மேல் மாடியில் வேலூரை சேர்ந்த சேகர் என்பவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரான திருப்பூர் மண்ணரையை சேர்ந்த சாஜகான், அதே போல் கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகளான பாண்டி, கதிர்வேல், தமிழரசன், அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட கிரண் ராவ், சம்சுதீன், திருட்டு வழக்கில் சமந்தப்பட்ட கார்த்திக் (எ) குப்பை கார்த்திக் மற்றும் மற்றும் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதியில் லாட்டரி விற்பனை செய்தவர் உள்ளிட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Tags : court ,
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...