×

மாநில அளவிலான யோகா போட்டி

திருப்பூர், அக். 24:  யோகா கல்ச்சுரல் சொசைட்டி மற்றும் ஆல் இந்தியா கல்ச்சுரல் பெடரேசன் ஆகியவை சார்பில், மாநில அளவிலான யோகாசனப் போட்டி கோவை அக்ஷய இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் வளாகத்தில் நடந்தது. இப்போட்டியில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற, திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 24 பேர் முதலிடமும், 21 மாணவர்கள் இரண்டாமிடமும், 1 மாணவர் மூன்றாமிடமும் பெற்றனர்.மேலும், மழலையர் வகுப்பை சேர்ந்த லக்ஷிகா, பிரித்திவ், வருணிகா ஆகியோர் சாம்பியன் டூ சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் சிவசாமி, பள்ளி செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், துணை இயக்குனர் வைஷ்ணவி மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Statewide Yoga Competition ,
× RELATED மாநில அளவிலான யோகா போட்டி சுரண்டை எஸ்ஆர் பள்ளி மாணவர்கள் சாதனை