×

மூளைச்சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

கோவை,அக்.24:  கோவையில் மூளைச்சாவடைந்த ரகுநாதன் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டது. மாநகர போலீசார் ஒத்துழைப்புடன் தானம் பெறப்பட்ட உடல் உறுப்புகள் விமானம் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை இயக்குனர் டாக்டர். சுகுமாறன் கூறுகையில் வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் ரகுநாதன்(43). இவர் கடந்த  20-ம் தேதி மூளை ரத்தநாளம் வீக்கமடைந்ததால் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனைத்து ஆதார சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. 22 தேதி அவர் உயிரிழந்தார்.அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர்.
கண்கள், சிறுநீரகம்,இருதயம், நுரையீரல் ஆகியன தானமாக பெறப்பட்டு கோவை மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பபட்டது. காவல்துறை உதவியோடு கல்லீரலும் மற்றும் இதயம் விரைவாக விமானம் மூலம் சென்னை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. என்றார்.

இதுகுறித்து ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி ராம்குமார் கூறுகையில், தக்க சமயத்தில் தைரியமான முடிவுகளை மேற்கொண்ட ரகுநாதன் குடும்பதினருக்கு எங்கள் மருத்துவமனையும், உடல் உறுப்புகளை தானமாக பெற்றவர்களும் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். என்றார்.முதுநிலை அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர். ஆனந்த பரதன் கூறுகையில், ஆழந்த சோகமான நிலையிலும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை உடனடியாக முடிவெடுத்து தானமாக வழங்கிய அவரது குடும்பத்தினருக்கு நன்றிகள். என்றார்.

Tags :
× RELATED கோவை அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி