திருச்செங்கோடு, அக்.18: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: திருச்செங்கோடு திமுக அலுவலகத்தில் வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறும். எனவே, இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.