×

லாரியில் கொண்டு வந்த ₹1.13 லட்சம் பறிமுதல்

திருச்செங்கோடு, ஏப். 10: திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருச்செங்கோடு – நாமக்கல் சாலை பிரிவில் பறக்கும்படையின் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த லாரியில் ஆவணமின்றி ₹1.13 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவர் அரியாக்கவுண்டம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து ₹1.13 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், ஆர்டிஓ அலுவவலகத்தில் ஒப்படைத்தனர்.

The post லாரியில் கொண்டு வந்த ₹1.13 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thiruchengode ,Tiruchengode ,Namakkal ,Dinakaran ,
× RELATED நாமக்கல் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியை சுற்றி Drone-கள் பறக்க தடை