அரூர், அக்.18: அரூர் பஸ் ஸ்டாண்டில், மதிமுக கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் மகாராஜன் வரவேற்றார். அமைப்பு செயலாளர் வந்தியதேவன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட அவைத் தலைவர் சாமிகண்ணு, மாவட்ட துணை செயலாளர் புத்திரன், மாரியப்பன், வழக்கறிஞர் சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபிரகாஷ், கைலாசம், சுகவனம், மாரியப்பன், மாவட்ட இலக்கிய அணி சுப்பிரமணி, விவசாயஅணி துணை அமைப்பாளர் சின்னராஜ், இந்திராணி, சண்முகம், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.