×

தலைமறைவு ரவுடியை கைது செய்ய போலீசார் தீவிரம்

புதுச்சேரி, அக். 15: புதுச்சேரியில் காவலர்களை தாக்கிவிட்டு தலைமறைவான ரவுடியை கைது செய்யும் பணியில் வில்லியனூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி, வில்லியனூர் அடுத்த கரிக்கலாம்பாக்கத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் சிவகுரு, மைக்கேல் இருவரையும் ரவுடி கும்பல் 2 வாரத்துக்கு முன்பு தாக்கியது. இதுதொடர்பாக 4 பேர் ரவுடி கும்பல் மீது வழக்குபதிந்த போலீசார் ஜோசப் உள்ளிட்ட இருவரை ஆலங்குப்பத்தில் கைது செய்தனர். அப்போது பள்ளத்தில் தவறி விழுந்த ரவுடி ஜோசப் கால்முறிந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதனிடையே இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடிகள் அய்யனாரப்பன், அருணாச்சலம் இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், அருணாசலத்தை போலீசார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும் ரவுடி அய்யனாரப்பன் தொடர்ந்து போலீஸ் பிடியில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார். அவர் கோர்ட்டில் சரணடைய திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்கள் முன்பு மப்டி உடையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரது வீட்டையும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Tags : arrest ,Rowdy ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...