×

திருநின்றவூரில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திருநின்றவூர், அக்.4:  திருநின்றவூரில் நடுரோட்டில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவருக்கு சப்ளை செய்த பிரபல கஞ்சா வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.ஆவடியை அடுத்த திருநின்றவூர், சுதேசி நகர், தாமிரபரணி தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு மாறுவேடத்தில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு வாலிபர் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரது பாக்கெட்டை சோதனை செய்த போது, அதில் 1.2 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, அவரை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருநின்றவூர், ராமதாசபுரத்தை சேர்ந்த கார்த்திக் (19) என்பது தெரியவந்தது. மேலும் இவருக்கு கஞ்சா பொட்டலங்களை சப்ளை செய்த பிரபல கஞ்சா வியாபாரி நாதன் என்பது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். பின்னர், போலீசார்  அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  நேற்று புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக கஞ்சா வியாபாரி நாதனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags : Thiruninravur ,
× RELATED குடும்பத்தை கவனிக்காமல் அடிக்கடி...