×

சாலை அகலப்படுத்தும் பணி மந்தம்

பெண்ணாடம், அக். 2: பெண்ணாடம்- விருத்தாசலம் நெடுஞ்சாலைகளில் சாலை அகலப்படுத்தும் பணி மந்தமாக நடப்பதால் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடி- ஆவினங்குடி, பெண்ணாடம்- விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலைகளில் சாலையின் குறுக்கே உள்ள வடிகால் வாய்க்கால்கள் அகலப்படுத்தும் பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொங்கி பணி நடந்து வருகிறது. ஆனால் கடந்த 3 மாதமாக இந்த பணி மந்தமாக நடந்து வருகிறது. மேலும் பெண்ணாடம்- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் தரைப்பாலம் கட்டும் பணியும் மந்தமாக நடந்து வருகிறது.

இதனால் விருத்தாசலம் -பெண்ணாடம் வழியாக திட்டக்குடி செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 5 மாதத்தில் மட்டும் இந்த சாலையில் அதிக விபத்துக்கள் நடந்துள்ளது. எனவே இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறையினர் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Road ,work slowdown ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...