×

குலசேகரத்தில் ரகசிய இடத்தில் செயல்பட்ட பிளாஸ்டிக் குடோன்

குலசேகரம், அக். 2: உலகம் முழுவதும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளால் இயற்கை அழிவதுடன்  சுகாதார கேடுகளும் ஏற்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க  வேண்டுமென்ற விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி  முதல் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓரளவு பிளாஸ்டிக் பயன்பாடு  குறைந்துள்ளது. முழுமையான நடவடிக்கை இல்லாததால் பிளாஸ்டிக் பயன்பாடு  முற்றிலும் கட்டுபடுத்த முடியவில்லை. மறைமுகமாக பதிக்கி வைத்து சப்ளை  செய்வதும் அண்டை மாநிலத்திலிருந்து பைக் மற்றும் கார்களில் கொண்டு சென்று  சந்தை மற்றும் கடைகளில் பயன்படுத்தப்படுகிறது.  அதிகாரிகள் அவ்வப்போது  சோதனை நடத்தி இவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனர். இந்த நிலையில் குலசேகரம் மணலிவிளை பகுதியில் ஒதுக்கு புறமான  இடத்தில் பிளாஸ்டிக் குடோன் உள்ளதாக குலசேகரம் பேரூராட்சி அலுவலகத்திற்க்கு  தகவல் கிடைத்ததையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி தலைமையில்  பேரூராட்சி ஊழியர்கள் அந்த குடோனை திறந்து சோதனை நடத்த  முயற்சித்தனர். அதற்கு அதன் உரிமையாளர் ஒத்துழைக்காததால் குலசேகரம்  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஐ சுந்தரலிங்கம் தலைமையில்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதனையடுத்து போலீசார் முன்னிலையில்  குடோன் திறக்கப்பட்டது. அங்கு பல லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கைபற்றி  டெம்போவில் ஏற்றி சென்றனர். இதனை பதுக்கி வைத்திருந்த செரிப் என்பருக்கு  50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை  ஏற்படுத்தியது.

Tags : kudong ,place ,Kulasekara ,
× RELATED 3வது இடத்துக்கு சீமானுடன்தான் போட்டி...