×

2 பேருக்கு வலைவீச்சு ஒரத்தநாடு பகுதியில் குடிமராமத்து பணிகள் ஆய்வு

ஒரத்தநாடு, அக். 2: ஒரத்தநாடு பகுதியில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.ஒரத்தநாடு ஒன்றியம் பருத்திக்கோட்டை, புலவன்காடு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் அண்ணாத்துரை நேற்று ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம் ஏரி, குளத்துக்கான வரத்துவாய்க்கால் மற்றும் ஆக்கிரமிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து தூர்வாரும் பணிகளை தரமாக செய்யுமாறும், கரைகளை பலப்படுத்தி வெளிப்புறங்களில் மரக்கன்றுகளை நடுமாறும் ஊரக வளர்ச்சித்துறைக்கு உத்தரவிட்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் முகம்மது இஷாக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : area ,Ottanadu ,
× RELATED நெல்லையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது