×

ஆ.தாழையூர் மேம்பாலத்தின் நடைபாதையில் ஆபத்தை ஏற்படுத்தும் குழிகள்

இளம்பிள்ளை,  அக்.1: மகுடஞ்சாவடி அடுத்த ஆ.தாழையூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  மேம்பாலத்தில், நடைபாதை இரண்டு பெரிய குழிகள் உள்ளன. விபத்து ஏற்படும் முன்  சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம்-  சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி அருகே ஆ.தாழையூர் கிராமம்  அமைந்துள்ளது. இங்கு தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே பாலம் ஒன்று உள்ளது.  பாலத்தின் அடியில் சேலம்-ஈரோடு ரயில்வே பாதை உள்ளது. போதிய பராமரிப்பு  இல்லாததால் இந்த பாலத்தில் உள்ள நடைபாதையில் இரண்டு இடங்களில் குழிகள்  உள்ளன. எந்நேரத்திலும் உயிர்பலி வாங்க காத்துள்ளது. விபத்து ஏற்படும்  முன்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிவடிக்கை எடுத்து  சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : corridor ,
× RELATED கோவை, திருச்சியில் ரூ.3 ஆயிரம் கோடியில்...