திண்டுக்கல், அக். 1: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் பிரிவின் சார்பில் 2019-20ம் ஆண்டு ஆகஸ்ட் 2019ம் மாதத்திற்கான மாவட்ட அளவிலான மாதாந்திர போட்டிகள் தடகளம், நீச்சல் ஆகிய தனிநபர் போட்டிகளும் இறகுப்பந்து, கால்பந்து ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் அக்.4ம் தேதியன்று வயது வரம்பின்றி இருபாலருக்கும் மாவட்ட விளையாட்டரங்கத்தில் காலை 8.00 மணி முதல் துவங்கவுள்ளது.தடகள போட்டிகள்ஆண்கள்: பொது பிரிவு (ஓபன்): 100 மீ, 800 மீ, 1500 மீ, நீளம் தாண்டுதல்,. குண்டு எறிதல்பெண்கள்: பொது பிரிவு (ஓபன்): 100 மீ, 200 மீ, 400 மீ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல்.நீச்சல் போட்டிகள் (ஆண்கள்- பெண்கள்): 50மீ ப்ரீ ஸ்டைல், 50 மீ பேக் ஸ்ட்ரோக், 50மீ ப்ரீஸ்ட் ஸ்ட்ரோக், 50மீ பட்டர்பிளை ஸ்ட்ரோக். குழு போட்டிகள்: இறகுப்பந்து, கால்பந்து (ஆண்கள்- பெண்கள்). மேற்காணும் போட்டிகளில் தடகளம், நீச்சலில் ஒருவர் இரண்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
இறகுப்பந்து, கால்பந்து போட்டிகளில் ஒரு பள்ளி, கல்லூரியிலிருந்து ஒரு பெண்கள் அணி, ஒரு ஆண்கள் அணி கலந்து கொள்ளலாம். தனிநபர் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு, குழு போட்டிகளில் முதல் இரு இடங்களை பெறும் அணி வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்-624004, தொலைபேசி எண்:-0451-2461162 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.