×

வடமதுரையில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் மனு

திண்டுக்கல், அக். 1: வடமதுரை சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து விட்டு கூறுகையில், ‘நாங்கள் வடமதுரை பஸ் நிறுத்தம் அருகேயுள்ள காணப்பாடி பிரிவில் ஆட்டோ ஸ்டாண்ட் சங்கம் அமைத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 80 தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டி வருகிறோம். எங்களது ஆட்டோ ஸ்டாண்டை ஓட்டி தனியார் ஜவுளிக்கடை ஒன்று உள்ளது. அதன் உரிமையாளர் அரசு விதிமுறைகளை மீறி அடுக்குமாடி கட்டிடம் அமைத்தும், சாலையை ஆக்கிரமித்து ஆஸ்பிடாஸ் கூரை அமைத்து கார் செட் அமைத்துள்ளார். மேலும் எங்களது ஆட்டோ ஸ்டாண்டை காலி செய்யக்கோரி பல்வேறு வகையில்இடையூறு அளித்து வருகிறார். இதனால் எங்களால் தொழில் செய்யமுடியாமல் தவித்து வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Vadamadurai ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...