×

பைனான்சியருக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது

மானாமதுரை, செப்.30:பைனான்சியரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை  மாவட்டம், மானாமதுரை ஆதனூர் ரோடு பகுதியை சேர்ந்த கருப்பையா மகன்  முருகவேல்(57), பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு டூவீலரில்  சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மர்ம நபர் அவரை வழிமறித்து சரமாரியாக  அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.இந்த நிலையில், முருகவேலை அரிவாளால் வெட்டிய அதே  பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் கரிகாலன்(21) என்பவரை மானாமதுரை போலீசர்  கைது செய்தனர். முருகவேலுக்கும் கரிகாலனின் தந்தை சுப்பிரமணிக்கும் ஏற்கனவே  முன்விரோதம் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் அதே  பகுதியில் இரு வாலிபர்களை மற்றொரு கிராமத்தினர் வெட்டியதால் மானாமதுரையில்  பஸ் மறியல். கடையடைப்பு என பதட்டம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அதே  பகுதியில் கொலை முயற்சி நடந்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : financier ,
× RELATED பைனான்சியரிடம் மிரட்டி ₹50 ஆயிரம் பறிப்பு மேலும் 2 பேர் கைது வேலூரில்