×

பைனான்சியரிடம் மிரட்டி ₹50 ஆயிரம் பறிப்பு மேலும் 2 பேர் கைது வேலூரில்

வேலூர், பிப்.8:
வேலூரில் பைனான்சியரிடம் மிரட்டி ₹50 ஆயிரம் பறித்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் பைனான்சியர் குமார் (58). இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் 7 பேர் அவரை மிரட்டி பணம் கேட்டனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே, அவரின் பாக்கெட்டில் இருந்த ₹50 ஆயிரத்தை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கணேஷ் (24), குபேந்திரன் (32), ராஜேஷ் (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த 4 பேரை தேடி வந்தனர். அதில் சைதாப்பேட்டையை சேர்ந்த ரகுவரன் (29), ரமேஷ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்.

The post பைனான்சியரிடம் மிரட்டி ₹50 ஆயிரம் பறிப்பு மேலும் 2 பேர் கைது வேலூரில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Financier ,Kumar ,Saitappet, Vellore ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி...