×

சுற்றுச்சூழல் பொறியாளர் பொறுப்பேற்பு

ஈரோடு, செப். 26:  ஈரோடு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளராக மலையாண்டி பணியாற்றி வந்தார். இவர், தற்போது சென்னை மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராக பதவி உயர்வு பெற்று மாறுதலாகி சென்றார்.இவருக்கு பதிலாக திருப்பூர் வடக்கு உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்த உதயகுமார் பதவி உயர்வு பெற்று ஈரோடு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து உதவி பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Responsible for Environmental Engineer ,
× RELATED கோபியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை