×

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி

திருச்செங்கோடு, செப்.26: திருச்செங்கோட்டில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில், பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.நாமக்கல் மாவட்ட அளவிலான 38வது சிலம்பப் போட்டி, திருச்செங்கோடு எஸ்பிகே பள்ளிகள் வளாகத்தில் நடந்தது. மிக இளையோர், இளையோர், மூத்தோர் மற்றும் மேல்மூத்தோர் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பிடம் பெற்ற 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில்  முதலிடம் பெற்றவர்கள், திருநெல்வேலியில் வருகிற வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாநில சிலம்பாட்டக் கழகம் நடத்தும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் பிரபு தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் சக்திவேல் வரவேற்றார். திருச்செங்கோடு டிஎஸ்பி  சண்முகம், சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Tags : Chilamba ,
× RELATED மாநில சிலம்ப போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்