×

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கன அடி 21வது நாளாக பரிசல் இயக்க தடை

பென்னாகரம், செப்.26: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், 21வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையாலும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் 35 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் நேற்றும் ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, ஐவர் பாணி, ஊட்டமலை பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் நேற்று 21வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதே போல் மெயினருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நடைபாதையை தாண்டி தண்ணீர் செல்வதால், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் தண்டபாணி தலைமையிலான போலீசார் கயிறு கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். நேற்றும் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமலும், பரிசலில் செல்ல முடியாமலும் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Tags : waterfront ,
× RELATED அருவி சாலை பணிகள் நிறைவு...