×

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கன அடி குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை

பென்னாகரம், செப்.25: ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரலாக மழை பெய்து வருகிறது. இதில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் நேற்று முன்தினம் 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளம் ஆர்பரித்து கொட்டுகிறது. மெயினருவி, ஐவர்பாணி, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. அதே போல் நடைபாதையை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்கிறது. தொடரந்து தண்ணீர் அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஆர்ப்பரித்து வரும் நீரை கண்டு செல்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் தண்டபாணி தலைமையில் போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதில் நேற்று 20 வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்துள்ளனர்.

Tags : district administration ,Oakenakkal ,
× RELATED காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி...