×

கணினி இயக்குபவர் பதவி தேர்வு நடவடிக்கை ரத்து

தர்மபுரி, செப்.25: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின், கணினி இயக்குபவர் பதவிக்கான தேர்வு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து கட்டுமானத்தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) இந்தியா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:   தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், காலியாக உள்ள 111 கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த 8ம் தேதி எழுத்து தேர்வு சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில்  நடைபெற்றது. தற்போது மேற்காணும் எழுத்து தேர்வு, தேர்வு முடிவுகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. தேர்வு நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : system operator ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா