×

5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு காங்கயத்தில் கண்டனக் கூட்டம்

காங்கயம், செப்.25: 5, 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்ற அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து, காங்கயத்தில் கூட்டம் நடைபெற்றது. புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்ற அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து காங்கயத்தில் கூட்டம் நடந்தது. இதில் அமைப்பின் காங்கயம் ஒருங்கிணைப்பாளர் கவி தலைமை வகித்தார். கூட்டத்தின்போது 5, 8ம் வகுப்பு படிக்கும் சிறுவர், சிறுமிகளை மனரீதியாக பாதிப்புக்குள்ளாக்கும் பொதுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் காங்கயம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தணிகாசலம், மதிமுக நிர்வாகி மணி, விசிக காங்கயம் ஒருங்கிணைப்பாளர் ஜான்நாக்ஸ், புரட்சிகர இளைஞர் முன்னணியின் காங்கயம் பகுதி நிர்வாகிகள் பாலு, தமிழினியன், திருநாவுக்கரசு, விடியல் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

Tags : 8th General Assembly Convention ,Colombo ,
× RELATED இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம்