×

சிலை கரைத்தவர் அலையில் சிக்கி பலி

சென்னை: கொட்டிவாக்கம், வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (38). இவருக்கு சத்யா என்ற மனைவியும், 8 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, களிமண்ணால் ஆன சிலையை வீட்டில் வைத்து வழிப்பட்ட சுரேஷ், மாலையில் அந்த சிலையை கடலில் கரைக்க, தனது குடும்பத்தினருடன் பாலவாக்கம் பல்கலை நகர் கடற்கரைக்கு வந்தார். அங்கு, சிலையை கரைத்துவிட்டு கடலில் கை, கால்களை கழுவியபோது, ராட்சத அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். இதை பார்த்த மீனவர்கள் கடலில் குதித்து, சுரேஷை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்….

The post சிலை கரைத்தவர் அலையில் சிக்கி பலி appeared first on Dinakaran.

Tags : wave of ,dissolver ,Chennai ,Suresh ,Venkatesapuram ,Satya ,wave of Kills ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்