×

நோயால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் மின் கம்பத்தில் கார் மோதி டிராவல்ஸ் உரிமையாளர் பலி

மன்னார்குடி, செப். 20 : பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ்(40). கார்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த உதயகுமார்(35). இவர்களது நண்பர்கள் நேற்று முன் தினம் இரவு சென்னைக்கு கிளம்பினர். 2 பேரும் நண்பர்களை காரில் மன்னார்குடிக்கு அழைத்து சென்று ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை காரை எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பினர். காரை தேவதாஸ் ஓட்டினார். அருகில் உதயகுமார் அமர்ந்திருந்தார். மன்னார்குடி வடசேரி சாலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் தேவதாஸ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். உதயகுமார் லேசான காயமடைந்தார். அவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மன்னார்குடி டவுன் போலீசார்  விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED போலீசாருக்கு எஸ்பி பாராட்டு...