×

அரியலூர் குறைதீர் கூட்டத்தில் 428 கோரிக்கை மனுக்கள் குவிந்தன

அரியலூர், செப். 17: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை தொடர்பாக 428 மனுக்கள் குவிந்தன.
அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 428 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றார். பின்னர் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. பின்னர் மாற்றுத்திறனாளிகளிடம் 29 கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், துணை ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Ariyalur ,grievance meeting ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...