×

பாப்பிசெட்டிப்பட்டி அரசு பள்ளிக்கு சுற்றுசுவர்

அரூர்,செப்.11: அரூர் அடுத்த பாப்பிசெட்டிப்பட்டியில், அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு புதியதாக சுமார் ₹1 கோடி மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 2 ஆண்டு முன்பு முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தற்போது இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே பள்ளிக்கு சுற்றுசுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Popischettipatti ,Government School ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...