சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதத்தில் இருந்து மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுரையை செயல்படுத்திடும் விதமாக அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 342 அரசு இ – சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த சேவை நடைமுறைக்கு வரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவையை அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்….
The post தமிழகத்தில் அடுத்த மாதத்தில் இருந்து மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும்!: சத்யபிரதா சாகு அறிவிப்பு appeared first on Dinakaran.