×

நீச்சல் பயிற்சி அளிப்பதாக மகளுக்கு பாலியல் தொல்லை: 2வது கணவர் மீது பெண் புகார்

சென்னை: வானகரத்தை சேர்ந்த 34 வயது பெண், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது முதல் கணவர் குமார் கடந்த 2013ம் ஆண்டு காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். எங்களுக்கு 13 வயதில் பெண் குழந்தையும், 9 வயதில் மகனும் உள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு எனது மகள் படிக்கும் பள்ளியில் ஓட்டுநராக வேலை செய்யும் கற்பகக்கனி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது என்னை கற்பகக்கனி திருமணம செய்து கொள்வதாக தெரிவித்தார். அதன்படி நான் இரண்டாவதாக அவரை திருமணம் செய்து கொண்டேன். அதற்கு வரதட்சணையாக சொந்தமாக கார் வாங்கித் தர வேண்டும் என்றார். அதன்படி, ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்தி, மாதத்தவணையில் கார் வாங்கி கொடுத்தேன். இரண்டாவது கணவருக்கும், எனக்கும் பிறந்த 9 மாத ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின் இரண்டாவது கணவர் நடவடிக்கை சரியில்லாமல் இருந்தது. சரிவர வீட்டிற்கு வருவதில்லை. இதுபற்றி விசாரித்தபோது, கற்பகக்கனி வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதற்கிடையே எனது முதல் கணவருக்கு பிறந்த 13 வயது பெண் குழந்தைக்கு நீச்சல் கற்று தருவதாக கூறி பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து நான் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 19ம் தேதி புகார் அளித்தேன். அதன்படி போலீசார் அவர்மீது போக்சோ வழக்கை பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. எனவே எனது 2வது கணவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post நீச்சல் பயிற்சி அளிப்பதாக மகளுக்கு பாலியல் தொல்லை: 2வது கணவர் மீது பெண் புகார் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Vanakarat ,Chennai Police Commissioner ,
× RELATED தமிழ்நாட்டில் போதைப்பொருளை...