திருப்பூர்: வேலாயுதம்பாளையத்தில் பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட உரிய ஆவணமின்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பது தெரியவந்தது. வங்கதேசத்தை சேர்ந்த ஜாகீர் உசேன்(23), ஆலாமின்(29), லிட்டன்(30), பிப்லாப் ஹாசன்(23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரிடோயன்(23), ரானா சார்ப்ரஷி(22), பால்புல் அஹமது(32), மோசின் ஹுசைன்(33) ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளனர்….
The post திருப்பூர் அருகே பனியன் நிறுவனத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது appeared first on Dinakaran.