திருப்பூர், ஜூன் 25: முதலிபாளையம் மற்றும் நல்லூர் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று (25ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முதலிபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ., லே-அவுட், கூலிபாளையம், காசிபாளையம், எஸ்.பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டன்பாளையம், விஜயாபுரம், மானூர், செவந்தாம்பாளையம் ஆகிய பகுதிகளிலும், நல்லூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சானார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது. இதேபோல் பழவஞ்சிபாளைய் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகர், பாலாஜி நகர், அய்யப்பா நகர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.