ஜூன் 19: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன்(46). இவர் சென்னையில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி பூங்கொடி(40). இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக வெங்கடசமுத்திரத்தில் தனியாக வீடு எடுத்து பூங்கொடி தங்கியுள்ளார். கடந்த 12ம் தேதி இரவு மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் பூங்கொடி சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென ஸ்டவ் வெடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த பூங்கொடியை மீட்ட அங்கிருந்தவர்கள், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பூங்கொடி உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.