×

அம்பையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அம்பை, ஜூன் 19: அம்பை நகராட்சி சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பிரேம்ஆனந்த் தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து  புறப்பட்ட பேரணி புதுக்கிராமம் தெரு, மேட்டுத்தெரு திருமஞ்சன ரோடு, மேலப்பாளையம் தெரு, பிரதான சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் நகராட்சியை வந்தடைந்தது.  
பேரணியின்போது பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் விளைவு குறித்தும், அதை உற்பத்தி செய்தல், சேமித்தல், விற்பனை செய்தல் ன்றவைகளுக்கு விதிக்கப்படும் அபராதம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.  இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் வீரபாகு, சுகாதார மேற்பார்வையாளர்கள் தஸ்தகீர், ஆறுமுகம், ரவிச்சந்திரன் பரப்புரையாளர்கள், தலைமை ஆசிரியர்கள் விஜயா, மாரியப்பன்,  ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Umbrella ,
× RELATED வெங்காய ஃப்ரைட் ரைஸ் ரெசிபி