×

போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு பெருமாநல்லூர் நினைவுஸ்தூபியில் இன்று நினைவஞ்சலி

அவிநாசி,ஜூன் 19:  பெருமாநல்லூரில், விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 1970ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியன்று கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் புதுப்பாளையம் ராமசாமி, வாரணாசிபாளையம் மாரப்பகவுண்டர், ஈச்சம்பாளையம் ஆயிக்கவுண்டர் ஆகிய 3 விவசாய இளைஞர்கள், பெருமாநல்லூரில் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.  விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு பெருமாநல்லூரில் உள்ள நினைவுஸ்தூபியில் ஆண்டு தோறும் விவசாயிகள் நினைவஞ்சலி செலுத்துவது வழக்கம் இதன்படி இன்று (ஜூன் 19) விவசாயிகள் சங்கம் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் பெருமாநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் நேற்று நடந்தது.  நினைவஞ்சலி நிகழ்ச்சியின் போது, பெருமாநல்லூர் நால்ரோட்டிலிருந்து ஸ்நேக் அமைக்கப்பட்டுள்ள இடம் வரை அமைதி ஊர்வலம் நடத்தப்படுகிறது. என கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு விவசாய அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்காக பெருமாநல்லூர் போலீசார் சார்பில் பெருமாநல்லூர் நினைவு ஸ்தூபியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Tags : memorial ,Farumanallur ,struggle ,
× RELATED சேலத்தில் வெயிலின் கொடுமையை விளக்க...