வீரவநல்லூர், ஜூன் 18: சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அடிவாரத்தில் பார்வதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சிவன், பார்வதி இருவரும் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பவுர்ணமி பூஜை நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து படப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் எம்.எல்.ஏ முருகையாபாண்டியன், மாவட்ட துணைசெயலாளர் செவல் முத்துசாமி, மாவட்ட இலக்கியஅணி செயலாளர் கூனியூர் மாடசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் இசக்கிபாண்டியன், பேரூர் செயலாளர் ஐசக்பாண்டியன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் பழனிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.