×

கடத்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

கடத்தூர், ஜூன் 14:  கடத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் கடும் அவதிப்படுகிறன்றனர். கடத்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, பொம்மிடி, கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலை உள்ளது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே சாலையோரத்தை ஆக்கிரமித்து, வாகனங்கள் நிறுத்தப்படுவதால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் கடத்தூர், சிந்தல்பாடி, அரூர் சாலைகளில் வாகனங்கள் நீண்ட தூரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி நேரங்களில் இது போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையோரங்களை ஆக்கிரமித்துள்ள கடைகள் மற்றும் வாகனங்களை அகற்றி, போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stand ,Kattathur ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...