மதுரை, ஜூன் 13: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட 5 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்த, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரின் அதிரடி நடவடிக்கைளை கண்டித்து, மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ெஜயராஜராஜேஸ்வரன் தலைமை வகிக்க, செயலாளர் நீதிராஜா கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வுபெற்ற ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார். இதில் பல்வேறு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 5 பேருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். துணைத் தலைவர் ராமதாஸ் நன்றி கூறினார்.