×

புளுதியூர் சந்தையில் ₹25 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், ஜூன் 13: அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூர் சந்தையில், ₹25 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், நேற்று கால்நடை சந்தை நடந்தது. மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வாங்க வியாபாரிகள் வந்தனர். நேற்று, இறைச்சி மாடு ₹22 ஆயிரம் முதல் ₹51 ஆயிரம் வரையும், ஆடு ₹4 ஆயிரம் முதல் ₹8700 வரையும் விற்பனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் ₹25 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. எதிர்வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு, மாடுகள் அதிக அளவில் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா