×

வள்ளியூரில் பட்டப்பகலில் அடுத்தடுத்த 3 வீடுகளில் 10 பவுன் கொள்ளை

வள்ளியூர், ஜூன் 13: வள்ளியூரில் அடுத்த ராஜரத்தினம் நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் நேற்று அடுத்தடுத்துள்ள 3 வீடுகளை உடைத்து கைவரிசையை காட்டியுள்ளனர். இதில் ராஜரத்தினம் நகர் மேற்கு தெருவைச் சேர்ந்த  சுதாகர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். மதியம் 1 மணிக்கு வீடு திரும்பியபோது முன்பக்க கதவு திறந்து கிடந்தது கண்டு பதறினார். உள்ளே சென்றபோது மர்மநபர் ஒருவர் கையில் பையுடன் வெளியே ஓடினார்.  அவரை மடக்கி பிடிக்க முயன்றபோது  சுதாகரை தள்ளிவிட்டு மர்மநபர் சுவர் ஏறி குதித்து அருகில் நிறுத்தியிருந்த பைக்கில் ஏறி தப்பிச்சென்றார். பின்னர் சுதாகர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 10 பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்ததது. தகவலறிந்து விரைந்து வந்த வள்ளியூர் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அருகேயுள்ள ஆசிரியை ரேவதி மற்றும் ஜோஸ்  ஆகியோர் வீட்டிலும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்ததது. இதுதொடர்பாக வழக்குப் பதிந்த போலீசார், மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Tags : robbery ,homes ,Valluur ,
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...