×

தேசிய நெடுஞ்சாலையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர்,குளிர்பானம் விற்க தடை

ஊட்டி, ஜூன் 12: உயர்நீதிமன்ற உத்தரவு படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு  உடனடியாக அமல் படுத்தப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குடிநீர், குளிர்பானங்கள், உணவு பொருட்களுக்கு கடந்த மே 29ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்ட குடிநீர்,குளிர்பானம்  பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து கடைகளில் உடனடியாக அமல்படுத்துவது எனவும், நீலகிரி மாவட்டம் முழுவதும் அமல்படுத்த நீதிமன்றத்தில் கால அவகாசம் கோருவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இதில் அனைத்து வியாபார, வணிக, உணவகங்கள் மற்றும் தொடர்புடைய சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது.
 
எனவே உயர்நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை எடுத்து வர வேண்டாம் எனவும், நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளில் மேற்கண்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம். மறுசுழற்சி செய்ய கூடிய பாட்டில்கள் மற்றும் கேன்களை குடிநீர் பாட்டில்களுக்கு மாற்று பொருளாகவும் பயன்படுத்தவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நீலகிரி மாவட்டத்தின் நெடுஞ்சாலைகள், சுற்றுலா தலங்கள், பொது இடங்களில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்க பெறும் வகையில் சுத்திகரிக்கும் குடிநீர் கருவிகளை தற்சமயம் பொருத்தவும், இதை அனைத்து இடங்களுக்கு விரிவாக்கம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுசூழலை பாதுகாக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் ெநகிழிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிைலயில், தற்சமயம் இதற்கு மாற்று பொருளாக பாய்ல் கப்கள் மற்றும் பிளாஸ்டிக் கலந்த கார்ஸ்ட்ரெச் கப்கள் உபயோகத்தில் உள்ளதாக கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வகை கப்கள் உடல் நலத்திற்கு அதிக தீங்கு விளைவிக்க கூடியது என்பதால் இவற்றிற்கும் நீலகிரி மாவட்டம் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நீலகிரி எஸ்.பி., சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், அரசு அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : highway ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!