×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பழுதடைந்த நிழற்கூடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 12: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட பொம்மிடி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் கடந்த 15ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது இந்த நிழற்கூடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், பயணிகள் பயன்படுத்துவதில்லை. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ேடார் வந்து செல்லும் பகுதியில், நிழற்கூடம் பழுதடைந்துள்ளதால், மழை, வெயில் காலங்களில், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் மக்கள் புகார் கூறியும், நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா