×

சேத்தியாத்தோப்பு அருகே குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதி

சேத்தியாத்தோப்பு, ஜூன் 12: சேத்தியாத்தோப்பு அருகே வெய்யலூர் ஊராட்சியில் உள்ளது பரிபூரண நத்தம் கிராமம். இக்கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பரிபூரண நத்தம் கிராம மக்களுக்காகவும், பள்ளி மாணவர்களுக்காகவும் ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வந்த மினி வாட்டர் டேங்க் குடிநீர் ஆறு மாதமாக வரவில்லை. இதனால் வெகுதூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. போதிய குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து வெய்யலூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக பழுதடைந்த மினி வாட்டர் டேங்க்கை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Village villagers ,Sethiyatope ,
× RELATED கடுகுசந்தை அரசு பள்ளி முன்பு குழாய்...