×

வேலூர் பெண்கள் சிறையில் கைதியின் 8 மாத குழந்தை மருத்துவமனையில் அட்மிட்

வேலூர், ஜூன் 12: வேலூர் பெண்கள் சிறையில் கைதியின் 8 மாத குழந்தை வயிற்று போக்கு காரணமாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளது. வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி(33) என்ற பெண் கொலை வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு 8 மாத குழந்தையும் சிறையில் உள்ளது.

இந்நிலையில், பெண் கைதியின் 8 மாத குழந்தைக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே சிறை மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துள்ளனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், கைதியான அவரது தாயும் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளார் என்று சிறை போலீசார் தெரிவித்தனர்.

Tags : Vailoor ,baby hospital ,Vellore ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...