பாகூர், ஜூன் 11: பாகூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பாகூர் ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் குலசேகரன் மனைவி தேவி. இவரது மகள் யுவ (21). சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் உறவினர் ஒருவருக்கும் திருமணம் செய்ய சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்நிலையில் நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் யுவ அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். இதை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்த யுவஸ்ரீ வீட்டின் அறையில் இருந்த சீலிங் பேனில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டு தொங்கினார். இதைக்கண்ட அவரது தாயார் மற்றும் உறவினர்கள் யுவயை மீட்டு பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் யுவ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாகூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சவுரிமற்றும் போலீசார் சடலத்ைத கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக யுவதாயார் தேவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாகூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.